கல்லீரல் முத்திரை✨
🌺- கல்லீரலுக்கு சக்தி கொடுக்கும் அற்புத முத்திரை இந்த முத்திரை பயிற்சி இரண்டு கைகளும் செய்ய வேண்டும். ஒரு கையின் நடுவிரலை மற்றொரு கையின் விரல்களால் அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். நடுவிரல் தவிர மற்ற விரல்களை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.
🌺- இந்த முத்திரைப் பயிற்சியை குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. எவ்வளவு நேரமும் செய்யலாம் .
எந்த நேரமும் செய்யலாம். எவ்வளவு நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு கல்லீரலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. நல்ல மூச்சு பயிற்சியுடன் செய்வது நல்லது.
✨பயன்கள்✨
🌺- கல்லீரல் அதிக சக்தி பெறுகிறது.
🌺- கல்லீரல் நன்றாக வேலை செய்கிறது.
🌺- கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
🌺- பித்தப்பை நோய்களுக்கும் நீக்குகிறது.
🌺- இந்த முத்திரைப் பயிற்சியை தினமும் நாம் 45 நிமிடங்கள் செய்தால் கல்லீரல் மற்றும் பித்தப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
🌺- உடலில் இருக்கும் அனைத்து கெட்ட சக்திகளும் வெளியேறுகிறது.
🌺- நாம் சக்தியுடன் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
🌺- நமது உடல் பஞ்ச பூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அதாவது காற்று,நெருப்பு,
நீர்,பூமி,ஆகாயம்; என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப் படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரை பயிற்சி மூலம் சமநிலைப்படுத்த எல்லாம்.
🌺- நமது ஐந்து விரல்களும் பஞ்ச பூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும்; ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும்; நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும்; மோதிர விரல் பூமியின் சக்தியாகவும்; சிறுவிரல் நீரின் சக்தியாகவும்; செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் போது அதற்கு உரிய பஞ்சபூத சக்திகள் சமநிலை ஏற்படுகிறது. அதனால், அதற்குரிய நோய்கள் குணமடைகிறது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலின் மின்காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலில் பிராணசக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.
🙏ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் ஓம் ஸ்ரீ அகத்திய சித்தரே போற்றி🙏











