உழவாரப்பணி என்றால் என்ன?
இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை.
உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர் திருநாவுக்கரசர்.
பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர்.
இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன
நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்

கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி.
இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர்.
இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்
எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி.
சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்











