காலை 9:40 மணி முதல் ஆரம்பமாகும் தேய்பிறை அஷ்டமி மறுநாள் வரை நீடிக்கும் என்பதால்
நீங்கள் மாலை 4.30 to 6.00 ராகுகால நேரத்தில் பைரவர் வழிபாடு செய்து கொள்ளலாம். ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் படம் வைத்து பூஜைகள் செய்யலாம்.
மனதில் இருக்கும் வேண்டுதல்கள் விரைவில் பலிக்க சிவனின் ஸ்வரூபமாக இருக்கும் பைரவர் சன்னிதிக்குச் சென்று செவ்வரளி மலர்கள் அல்லது செந்நிற மலர்களை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.
எத்தகைய துன்பங்களும் விரைவாக நீங்க பைரவர் நிச்சயமாக அருள் புரிவார். அவருடைய திரு நாமங்களை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது.
எந்த ஒரு பகைவர்களின் தொல்லயும் என்றும் அவர்களிடத்தில் அண்டுவதும் இல்லை. எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவர் வழிபாடு செய்வதை மறந்து விடாதீர்கள்.











