ஸ்ரீ சரநாராயண பெருமாள் -திருவதிகை
பிரதோஷம் நடக்கும் பெருமாள் கோயில் மற்றும் நரசிம்மர் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) அருள்பாலிக்கும் ஒரே அரிய ஸ்தலம்
மூலவர் : சரநாராயணப்பெருமாள்.
அம்மன்/தாயார் : ஹேமாம்புஜவல்லித்தாயார், செங்கமலத்தாயார்.
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கருட தீர்த்தம்
ஊர் : திருவதிகை
பழமை: 2000 வருட பழமையான கோயில்.
வட்டம்: பண்ருட்டி
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பெயர்க்காரணம்:
சிவனுக்கு, விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் “சரநாராயணப்பெருமாள்’ என அழைக்கப்படுகிறார்.
தல சிறப்பு:
1. மூலவர் சரநாராயணப்பெருமாள் (9 அடி உயரம்) முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.
2. பொதுவாக நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் உள்ள (ஒரே அரிய ஸ்தலம்) நரசிம்மர் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) தாயாருடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
3. சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
4. மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார்
தல வரலாறு:
திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும்.
இருப்பிடம்/செல்லும் வழி/அமைவிடம்:
பண்ருட்டியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் திருவதிகையில் இத்தலம் உள்ளது.
ஸ்ரீராமஜெயம்
வாழ்க வளமுடன்.











