திருமணம் விரைவில் கைகூட வைக்கும் தட்சணாமூர்த்தி சங்கு
இறைவன் எங்கும் இருக்கிறான். ஆனாலும், அனைவராலும் அந்த மாபெரும் தத்துவத்தை உணர்ந்து வழிபட இயலாது. அதற்காகத்தான், நம் முன்னோர்களும் சித்தர்களும் தெய்வீக பொருட்களையும் விக்ரகங்களையும் வீட்டிலும் வைத்து சிலர் பூஜைகள் செய்து வழிபடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். சங்குகளை வைத்து வழிபடுவதில் நிறைய நன்மை இருக்கின்றன. அப்படி பட்ட விஷேச சங்கை பற்றி தான் இந்த பதிவில் காண போகிறோம். அது தான் தட்சணாமூர்த்தி சங்கு.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்று சங்கு என்பது ஐதிகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. ‘குரு’ என்றால் நமக்கு தட்சிணாமூர்த்தியின் திருவடிவமே நினைவுக்கு வரும். இவரை ‘ஜகத்குரு’ என்று அழைக்கிறோம். இங்கு, ‘ஜகத்’ என்பது உலகம் என்ற பொருளில் வராமல் பிரபஞ்சம் முழுமையையும் குறிக்கும். தட்சிணாமூர்த்தி, சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர். சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் உரைத்தவர். ஞானத்தின் வடிவமாக போற்றப்படுபவர். குருக்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர்.
நவகிரகங்களில் ஒருவர், ‘பிரகஸ்பதி’. இவரையும் ‘குரு பகவான்’ என்றே அழைக்கிறோம். இவர், தேவர்களின் குருவாக விளங்குபவர். ஜாதக ரீதியாக நமக்கு ஏற்படும் இடர்கள் நீங்க, நாம் பரிகாரமாக வணங்கி வழிபட வேண்டியது இந்த தட்சணாமூர்த்தி சங்கைத்தான்.
அதேவேளை, தட்சிணாமூர்த்தி என்பவர் நவகிரகங்களுக்கும் தேவர்களுக்கும் அனைத்து உலகிற்கும் அதிபதியாகத் திகழ்பவர். எனவே, நாம் சிவபெருமானின் வடிவமாகத் திகழும் தட்சிணாமூர்த்தி சங்கை சரணடைந்தால், நமக்கு ஞானம் சித்திப்பதோடு, கிரகங்களால் உண்டாகும் தோஷங்களும் அண்டாமல் இருக்கும்.
வீடுகளில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி பூஜை அறை இந்த சங்கை வைப்பது சிறப்பு.
‘தட்சிணம்’ என்பதற்கு ஞானம் என்ற பொருள் உண்டு. ‘சிவனே தட்சிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்தியே சிவன். தேவர்களுக்கும் அதிபதியாக விளங்கும் குரு தட்சிணாமூர்த்தியை அல்லது தட்சணாமூர்த்தி சங்கை சரணடைந்தால் இருக்கின்ற அத்துணை தோஷங்களும் தவிடு பொடியாகும்.
தட்சணாமூர்த்தி சங்குகின் சிறப்புகள் :
தட்சணாமூர்த்தி சங்கின் சிறப்பு என்னவென்றால் திருமணம் ஆகாத அல்ல தடைப்படுகின்ற (ஆண் பெண்) இந்த சங்கை வியாழன் தோறும் வீட்டின் பூஜையறையில் பூஜை செய்து வந்தால் நிச்சயம் திருமணம் விரைவில் கைக்கூடும். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த தட்சணாமூர்த்தி சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது.











