வீடுதேடி வரும் டிஜிட்டல் சான்று.
#ஒய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தங்கள் உயிருடன்தான் உள்ளார்கள் என வங்கிக்கு சென்று அங்கு அவர்கள் தரும் விண்ணப்பத்தில் கையெப்பம் இடவேண்டும்.

கொரோனா காரணமாகவும். வங்கியில் அதிகநேரம் காத்திருக்கவேண்டிய காரணத்தினாலும் முதுமையில் தனியே வங்கிக்கு சென்று விண்ணப்பம் இட முடியாத காரணத்தினாலும் மத்திய அரசு #ஜீவன் பிரமாண் என்கின்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி ஒய்வூதியதாரர்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால் காரரிடம் #மொபைல்எண்,#ஆதார் எண்,#பி.பி.ஓ.எண் மற்றும் #ஒய்வூதிய வங்கி கணக்கு எண்ணினை அளிக்கவேண்டும். அதற்கான கட்டணமாக ரூபாய் 70-ஐ நிர்ணயித்துள்ளார்கள்.
தபால் அலுவலர் உங்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்குவார். அதனை பிறர் மூலம் நீங்கள் வங்கியில் செலுத்தி உங்கள் ஓய்வூதியத்தினை தொடர்ந்துபெறலாம்.;
வயதானவர்கள்-வங்கிக்கு செல்ல முடியாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது பென்ஷன் தாரராக இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரியபடுத்தவும்.
நன்றி:-தினமலர் நாளிதழ் (26.10.2020)
#வாழ்கவளமுடன்











