பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமணியர் கோவில்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது குக்கே சுப்பிரமணியர் கோவில்.
இத்திருத்தலத்திலேயே பாம்புகளுக்கு திதி கொடுக்கும் வழக்கம் உள்ளது.
இப்படி திதி கொடுப்பதன் மூலம் முன்னோர் சாபமும்,சர்ப்ப என்னும் நாக தோஷமும் நீங்கும் என நம்பிக்கை நிலவுகிறது.
கர்நாடகாவில் உள்ள முருகன் வழிபாட்டுத் தலங்களில் இது பிரபலமானது.பல யுகம் கண்ட கோவிலாக இத்தலம் விளங்குகிறது.
முருகப் பெருமான் தரகாசூரனை அழித்த பின்பு,தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இக்கோவில் அருகே ஓடும் குமாரதாரா நதிக்கு வந்தார் என தல புராணம் கூறுகிறது.
பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்கு நீராடியதாகவும் வரலாற்றில் உள்ளது.
பாம்புகளை காத்து அருள்புரிந்தவர் இத்தல முருகன்.இதனாலேயே ராகு,கேது தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கால சர்ப்பதோஷ நிவர்த்திக்கு இங்கே சிறப்பு பூஜையும்,நடத்தப்படுகிறது.
இங்கு பாம்புக்கு திதி கொடுத்தால் பித்ரு கடனைச் செலுத்திய பலனைப் பெறலாம்.
சர்ப்பதோஷ ஹோமம்
குக்கே சுப்பிரமண்யா கோவிலில் சர்ப்ப தோஷ ஹோமம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் இரண்டு நாள் இங்கேயே தங்க வேண்டும்.
முதல் நாள் சர்ப்ப விக்ரகம், முட்டை, கோதுமை மாவில் செய்யப்பட்ட இரண்டு பாம்புகள்,கலச தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இரண்டாம் நாள் கங்கா பூஜை செய்து நாகர் சிலைக்கு மஞ்சள்,குங்குமம் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.
குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு அருகிலேயே ஆதி சுப்ரமணியா கோவிலும் உள்ளது.
வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன.










