நான்தான் கேது பகவான்
நானே ரிஷிகளை உருவாக்கும் மகா ரிஷி. நானே ஞான காரகன்… பாட்டியாருக்கு காரகன். கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக இருக்கிறேன்.
நானே பிறப்பற்ற மோட்ச நிலையை உங்களுக்கு வழங்கும் மோட்சகாரகன். என்னிடம் தலை இல்லை ஆதனால் தலைக்கனமும் இல்லை.
உங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தி ஞான மார்க்கத்தில் அழைத்து செல்பவன் நானே.
என் அனுக்கிரகம் இருந்தால் உலகப்புகழ் பெற்ற சன்யாசி,யோகி ஆகலாம்.
சம்சார பந்தத்தில் உள்ள சிற்றின்பத்தை விடுத்து இறைவனை அடையும் பேரின்பத்தை உஙகளுக்கு வழங்குபவன். எனது அருள் பெற்றவர்கள் பின்னால் நடக்கவிருப்பதை முன்னால் கூறும் வல்லமை பொருந்திய ஆற்றலுடையவர்கள்.
நான் புத்திர தோசம். கால சர்ப்ப தோசம். களத்திர தோசம். மற்றும் துர்யோகங்கள் அளித்து உங்களை சோதிப்பவன்.
நான் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இதன் பொருள் உஙகள் மனதை கட்டுப்படுத்தி மெய்ஞான மார்க்கத்தில் உங்களை வழிநடத்துவதே நான்தான்.
உங்களுக்கு கிடைப்பதை தடுப்பதற்கு என்னிடம் ஏராளம் உள்ளன.
ஆனால் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.
அதுவே எதிலும் பற்று அற்ற ஞானம். விக்னங்களை தீர்க்கும் விநாயகனே போற்றி போற்றி.











