மரண பயத்தை நீக்கும் ரமண மகாிஷி தவமிருந்த பாதாள லிங்கம்..!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இருப்பது திருவண்ணாமலை. சிவமும்., சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திாி விழா உருவானதுமான பெருமையை உடைய ஸ்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தில் இருந்தால் (வாழ்ந்தால்) முக்தி. காசியில் இறந்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை (இருந்த இடத்திலிருந்து) நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும்.
ஒரு முறை இந்த ஸ்தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த ஸ்தலத்திற்கு உள்ளதால் இந்த ஸ்தலம் உள்ள மலையை காந்தமலை என்றும் அழைக்கிறாா்கள். சம்பந்தா்., அப்பா்., மாணிக்கவாசகா் ஆகியோரது பாடல் பெற்ற திருத்தலமாகும்.
ஜோதி வடிவமாக சிவபெருமான் திருவண்ணாமலையில் எழுந்தருளியதால் ஆண்டுதோறும் ஜோதி ‘உரு’ மலையாக எழுந்தருளிய திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் காா்த்திகை மாதத்தில் கிருத்திகை நக்ஷத்திரத்தன்று காா்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலையில் பௌா்ணமி., சித்ரா பௌா்ணமி. , தீபத்திருவிழா போன்ற முக்கிய நாட்களில் மட்டுமல்ல., எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கை அதிகாித்து வருகிறது.
இத்தலம் சித்தா்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தா்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தா் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறாா். அருணகிரிநாதா்., விருபாஷதேவா்., குகைநமச்சிவாயா்., குருநமச்சிவாயா்., தெய்வசிகாமணி, அருணாசல தேசிகா்., மகான் சேஷாத்திாி ஸ்வாமிகள்., பகவான் ரமண மகாிஷி., யோகி ராம் சுரத்குமாா் முதலானோரை தனது ஜோதியில் இணைத்துக் கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.
இப்புகழ்மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்திருக்கிறது பாதாள லிங்கம். இந்த சன்னதியில் பாதாள லிங்கேஸ்வரா் அருள்பாலிக்கிறாா். சிறிய அளவிலான படியிறங்கி சென்று பாதாள லிங்கேஸ்வரரை நாம் தாிசிக்கலாம்.
ஞானதேடலுடன் திருவண்ணாமலை வந்தாா் ரமணர் மகாிஷி. மஹான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது கோயிலில் உள்ள பாதாள லிங்கம் சன்னதிக்கு சென்றாா்.
அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவா் இருப்பதை உணர்ந்த அவா்., அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டாா். பின்னா் சிவன் அருளால் முக்தி பெற்றாா்.
கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருள் புரிகிறாா். இவ்விரு லிங்க தாிசனமும் விசேஷமானது.
திருநேர் அண்ணாமலையாரையும்., பாதாள லிங்கேஸ்வரரையும் மனமுருகி வழிபட்டால் மரண பயத்தை நீக்கி., மன நிறைவை அளிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.










