பொங்கல் பண்டிகை மற்றும் ராமசாமிப் பிள்ளை நினைவு தினம்
அன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ரமண பகவானைத் தஞ்சமென வந்தடைந்து பகவானுக்கும் பக்தர்களுக்கும் தொண்டு செய்வதையே சாதனமாகக் கொண்டு ஆத்ம சமர்ப்பணத்துடன் கர்மயோகம் அப்யசித்த பக்தர்களில் சாது ராமசாமிப் பிள்ளையும் ஒருவராவார்.
‘சைக்கிள் சாமி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ராமசாமிப் பிள்ளையவர்களின் நினைவு தினம் இன்று (14/1/2025) ஆச்ரம வளாகத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் பக்தர்களால் அனுசரிக்கப்பட்டது.
அன்பர்களின் துணைக் கொண்டு ராமசாமிப் பிள்ளை ஸ்கந்தாச்ரமத்திற்குச் செல்லும் வழியைச் செப்பனிட்டுப் பாதை அமைத்தார். அன்பரின் முயற்சியாலும் உடல் உழைப்பாலும் மலைச்சாரலில் உள்ள நீரோடையை ஒட்டியவாறு கரை அமைத்தார்.
ஆச்ரம காரியங்கள் மற்றும் பக்தர்களின் தேவைகளுக்காக வேண்டி ஒரு நாளைக்கு பலமுறை சைக்கிளில் சென்று வருவார். ஆகையால் இவரை “சைக்கிள் ஸ்வாமி” என்றே அன்பர்கள் அன்புடன் அழைப்பார்கள்.
ஸ்ரீரமணாச்ரமத்தில் நந்தவனம், தோட்டம் முதலியன அமைத்து, பல இடங்களில் குளிர் தரும் மரங்களை நட்டு அவற்றைப் பாதுகாத்து வந்தார். தனது 100 வது வயதில் ஸ்ரீபகவானது திருவடியை அடைந்தார்.











