குபேர வாழ்வு பெற தரிசிக்க வேண்டிய மோகனூர் சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) திருக்கோலம்:
நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணனை பூரண
அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும்.
சகல சௌபாக்யங்களும் வந்து சேரும்.
கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.
அனைத்து சம்பத்துக்களும் சேரும்.
இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.
மரிசீ மகரிஷியால் நமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி)ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மன நிம்மதியையும், மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.
அற்புதமான இந்த ஸ்லோகத்தை உலக மக்கள் நன்மை கருதியே
மரிசீ மகரிஷி நமக்கு அளித்தருளியிருக்கிறார்.
காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும் முன்பு ஒரு முறையும் இந்த ஸ்லோகத்தை சொல்வது
அளவற்ற நன்மையைத் தரும்.
முக்கியமாக, திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான
இல்லற வாழ்க்கையைத் தருவது இந்த ஸ்லோகம்.
திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
ஸ்ரீமந் நாராயணீயத்திலும், ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மரீசி இயற்றிய அந்த ஸ்லோகம் அர்த்தத்துடன் கீழே கொடுக்கபட்டுள்ளது.
சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி (கோபால சுந்தரி)
“ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே”!
பொருள் விளக்கம்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.
சம்மோஹன கிருஷ்ணர்(கோபால சுந்தரி) காயத்ரி:
ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்!
மோகனூர் சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) திருக்கோல படம்











