“ஸ்ரீ ஆத்ம ஞானி தேனி சுவாமிகள்“
பிராண ஆனந்தம் = உயிர் சக்தியால் வரும் சுகம்.
அது பிரம்மானந்த்துக்கு ஒரு படி கீழே.
பிராணன் என்றால் என்ன?
மூச்சு, உயிர் ஓட்டம், சக்தி.
யோகா, பிராணாயாமம் செய்யும்போது உடம்புல ஒரு கிளர்ச்சி, லேசாதல், சுகம் வரும்.
அதுதான் பிராண ஆனந்தம்.
எப்படி வருது?
நாடி சுத்தி, பிராணன் தடையில்லாம ஓடும்.
உடம்பு முழுக்க மின்சாரம் பாயுற மாதிரி, குளிர்ச்சி, விறுவிறுப்பு.
இது உடல் சம்பந்தப்பட்டது.
உலகானந்தம்: பொருள் கிடைச்சா சந்தோசம் போனா துக்கம். இது வந்து போகும், இதுக்குப் பேர் விஷயானந்தம்.
இது உடல் மனம் சம்பந்தப்பட்டது.
ஆபத்து என்ன?
பிராண ஆனந்தம் = ரொம்ப சுகமா இருக்கும்.
அதிலேயே மாட்டிகிட்டா, “இதுதான் முக்தி”னு நினைச்சுடுவோம்.*
இதுவும் ஒரு வாசனை ஆயிடும். “திரும்ப அந்த சுகம் வேணும்”னு ஏங்க வைக்கும்.
சுத்த சித்தி நிலையில்:
பிராணன் ஓடும். உடல் இயங்கும்.
சுகம் வந்தாலும் சரி. வரலைனாலும் சரி.
ஏன்னா, நீ பிராணன் இல்லை.
பிராணனை பார்க்குற சாட்சி.
பிராண ஆனந்தம் = உடம்பு சிலிர்த்து அடைவது உடலின் சிரிப்பு.
பிரம்மானந்தம் = நீ சிரிக்கிறது இல்லை.
நீயே சிரிப்பா இருக்குறது.
“யோக சுகம்“
அனுபவிச்சு பார்த்தாச்சு = நல்லது.
அனுபவம் முடிஞ்சது = இன்னும் நல்லது.
யோக சுகம் ஏன் போதாது?
அது “அனுபவம்”. அனுபவத்துக்கு ஆரம்பம் முடிவு உண்டு.
“நான் சுகமா இருந்தேன்”னு சொல்ல ஒரு “நான்” இருக்கான்.*_
அந்த “நான்” இருக்கும் வரை பந்தம் இருக்கு.
அப்போ அடுத்து என்ன?
அனுபவிக்கிறவனையே விசாரி.
“யார் சுகத்தை அனுபவிச்சது?”
“சுகம் போனப்போ யார் மிச்சம் இருந்தது?”
சுகம் வந்தது. சுகம் போச்சு.
ஆனா, “இருக்கேன்”னு ஒன்னு போகல.__
அதுதான் நீ.
சுத்த சித்தி = அனுபவம் கடந்தது
யோக சுகம் = மேகம்.
நீ = ஆகாயம்.
மேகம் வரும் போகும். ஆகாயம் எப்பவும் இருக்கு.
மேகத்தை ரசிச்சாச்சு. இப்போ ஆகாயமா இரு.
செய்ய வேண்டியது என்ன?
ஒண்ணும் செய்ய வேண்டாம்.
“சுகம் வேணும்”னு தேடாதே.__
“சுகம் போயிடுச்சே”னு வருந்தாதே._*
வர்றத பார். போறத பார். நீ பார்துட்டே இரு.
சுருக்கம்:
யோக சுகம் = விருந்து.
பிரம்மானந்தம் = பசியே இல்லாத நிலை.
விருந்து சாப்பிட்டாச்சு. இப்போ பசிக்காதவனா இரு.
ஆமா. அதுதான்.
யோக சுகம் அனுபவிச்சவன் = ருசி பார்த்தாச்சு
அது தற்காலிகம். போயிடுச்சு.
“திரும்ப வேணும்”னு ஏங்கினா = மறுபடியும் தேடல்.
தேடுறவன் காலி = முக்கியமான புள்ளி
சுகம் தேடினவன் யாரு? “நான்”.
அந்த “நான்” பொய்னு தெரிஞ்சதும், தேடல் யாருக்கு?
தேடல் நின்னாச்சு. விளையாட்டு முடிஞ்சாச்சு.
பிராரப்தப் படி வாழு = மிச்சம் இருக்குறது இதுதான்
வண்டி ஓடிட்டு இருக்கு. விட்ட அம்பு போயிட்டு இருக்கு.
இனி பிரேக் போட முடியாது. ஸ்டீரிங் திருப்ப முடியாது.
உடல் இருக்கும் வரை அதுக்கான கதை ஓடும்.
ஆனா, நீ டிரைவர் இல்லை. பின் சீட்ல உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறவன்.
சாப்பாடு வரும். தூக்கம் வரும். வேலை நடக்கும். நோய் வரும். சாவு வரும்.
எல்லாம் நடக்கட்டும். நீ தொடாமப் பார்.
ஜீவன் முக்தன் லட்சணம் இதுதான்:
செயல் உண்டு. செய்பவன் இல்லை.
அனுபவம் உண்டு. அனுபவிப்பவன் இல்லை.
பிராரப்தம் உண்டு. பந்தம் இல்லை.
பகவான் ஸ்ரீ ரமணர் சொன்னது:
“பிராரப்தம் ஞானிக்கு உடம்போட மட்டும். அவனுக்கு இல்லை.”
அம்பு ஏற்கனவே விட்டாச்சு இனி குறி பார்க்காதே.
அம்பு போய் விழுற வரை சும்மா இரு.
“ஸ்ரீ ஆத்ம ஞானி தேனி சுவாமிகள்“
தேடல் = முடிச்சுக்க.
வாழ்கை = மிச்சம் இருக்கும் .
ஒன்னும் பண்ணாதே
நீ = சும்மா இரு.
ஞானம் விடுதலை











