கோயில்களில் செய்யக் கூடாதவை!
ஆலயங்கள் செல்லும் சமயத்தில் செய்யக் கூடாதவை என்று பார்த்தால்.
- கோபம், பழி உணர்வு, வெறுப்பு போன்ற இவற்றை மனதில் சுமந்த படி ஆலயம் செல்லுதல் பாவம்.
- குளித்து, தூய உடை அணியாமல் செல்லுதல் பாவம்.
- நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- சுவாமி சந்நிதிகளை… அவசர, அவசரமாக வலம் வருதல் கூடாது.
- தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும்.
- சிவன் கோயில்களில் சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் அபசாரம் ஆகும்.
- விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது.
- கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. அது மகா பாவம்.
- கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது.
- இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும் போது பார்க்கக்கூடாது.
- சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ மூலவ, ரூபங்களை வாய்ப்புக கிடைத்தால் தொடுதல் அல்லது மிதித்தல் கூடாது.
- கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
- காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.
- மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்ட பின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- பிரகாரங்களை வலம் வரும் சமயத்தில் தவறுதலாகக் கூட….இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு, வில்வம், மலர்களை மிதித்து விடக்கூடாது.
- ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது.
- சுவாமி சிலைகளைத் தொடுவதோ அல்லது நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
- கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணெய் கறையை சுவரில் துடைக்கவோ கூடாது.
- ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. காரணம் அங்கு இறைவன் ஒருவரே மகா பெரியவர்.
- ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்.
- எந்த ஒரு வெளியூர் ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.
- பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்கு செல்லாதீர்கள்.
- ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள்.
- ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் திரை போட்ட பிறகு பிரதட்சணம் வேண்டாம்.
- சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிப்பது நல்லது.
- மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது மிகுந்த நல்ல பலனை தரவல்லது.
- பொதுவாக ஆலயங்களில், சன்னதிக்கு பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் தவறு. அதை செய்யாதீர்கள்.
- ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.
- ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக வெளியே அமர்ந்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு காசை தானமாக வழங்குங்கள். அப்படியாக தானம் செய்த பலனுடன் இறைவனை சென்று பார்ப்பது விசேஷம். மாறாக, கோவிலிருந்து வெளியே வரும் போது தானம் செய்யாதீர்கள்.
- காலை நேரத்தில் கோவிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
- ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது.
- கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது.
- இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து தெய்வத்தை கும்பிடுவது உகந்ததல்ல. இம்மாதிரியான செய்கை தெய்வத்தை அவமதிப்பதாகும்.











