தன் எதிர் வினையை கட்டுப்படுத்த முடியாத மனிதன்
தன் எதிர் வினையை கட்டுப்படுத்த முடியாத மனிதன் எல்லாவற்றையும் இழப்பான்
இந்தக் கட்டுரை ஆண் பெண் இருபாலருக்கும்..
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தோல்வியை அவமரியாதையை எதிர்கொள்வான் ஒரு காதல் தோல்வி ஒரு
திருமணத் தோல்வி ஒரு அவமானம் ஒரு சவால் அவனை தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இது போன்ற தருணம் வரும்.
ஆனால் பெரும்பாலான ஆண்கள் விளைவுகளை சந்தித்த பின்னர் கற்றுக் கொள்ளும் உண்மை என்னவென்றால்
ஒரு மனிதனை அழிப்பது அவமரியாதை அல்ல அவன் தோல்வி அல்ல அதற்கும் அவன் ஆற்றும் எதிர்வினை தான்
எண்ணற்ற ஆண்கள் நல்ல மனிதர்கள் தங்கள் ஒழுக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டை சோதிக்கும் ஒரு தருணத்திற்கு உணர்ச்சி
வசப்பட்டு எதிர்வணையாற்றியதால் தங்கள் திருமணங்கள் சுதந்திரம் தொழில் மற்றும் வாழ்க்கை கூட இழந்துள்ளனர் இந்த
இடத்தில்
அவர்களின் வலிமை முக்கியமல்ல அவர்களின் தைரியம் முக்கியமல்ல ஆனால் அவர்களின் சுய கட்டுப்பாடு மிக முக்கியம்
ஆண்கள் மிகவும் பாதுகாப்பற்றதாக உணரும் இடத்தில் அவமரியாதை ஏற்படுகிறது அவமானங்கள் தனிப்பட்டதாக
உணரப்படுகின்றன நீங்கள் மனதளவில் பலம் இல்லாத இடத்தில் இருக்கும்போது அந்த அடிகள் சரியாக விழுகின்றன உங்களுக்குள்
இருக்கும் ஒன்றை அது நினைவூட்டுவதால் உங்களுக்கு வலிக்கிறது ஒரு காயம் ஒரு பயம் ஒரு சந்தேகம் உங்கள் அடையாளம்
முழுமையாக வேரூன்றாத ஒரு தருணத்தில் இந்த அவமானமும் அவமரியாதையோ நிகழ்கிறது அதனால் தான் நீங்கள் இருக்கும்
இடத்தை நிலைமையை நீங்கள் புரிந்து கொள்ளாத போது உங்கள் எதிர்ப்பினைகள் கவனிக்க முடியாதவை வெடிக்கும் தன்மை
கொண்டவை மற்றும் நிறைய விலையை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது
ஆண்கள் செய்கின்ற அசல் குற்றத்தை விட எதிர்வினையால் அதிகம் இழக்கிறார்கள் பல ஆண்கள் தீயவர்கள் என்பதால் கடினமான
சூழ்நிலையில் இல்லை அவர்கள் மிக வேகமாக எதிர்வணையாற்றியதால் அவர்கள் அந்த சூழலில் இருக்கிறார்கள் பல ஆண்கள்
திறமை அற்றவர்களாக
இருந்ததால் தங்கள் வேலையை இழக்கவில்லை அந்த நொடி அந்த கணம் தூண்டப்பட்டதால் பல தந்தைகள் தங்கள் குழந்தைகளை
அக்கறையற்றவர்களாக இருந்ததால் இழக்கவில்லை
ஆனால் அவர்கள் கோபத்தை அறிவை விட சத்தமாக பேச அனுமதித்ததால் ஒரு கணம் உணர்ச்சிவசப்பட்டு பலவீனம் பல வருட ஒழுக்கத்தை ஒரு கணம் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாத எதிர்வணையை இதனுடைய விலை மிக மோசமானது பல காதலை அளித்துள்ளது பல குடும்பங்களை அளித்துள்ளது
எளிதில் தூண்டப்படக்கூடிய ஒரு மனிதனை பிறர் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் எளிதில் தூண்டப்படும் போது உங்களை கையாள்வது மிகவும் எளிது மக்கள் கற்றுக் கொள்கிறார்கள் எந்த தோணியில் பேசினால் நீங்கள் தூண்டப்படுவீர்கள் எந்த அவமானம் உங்களை வெடிக்க செய்கிறது எந்த அவமரியாதை உங்கள் பொறுமையை தகர்க்கிறது அவர்கள் உங்களை நகர்த்துவதை கற்றுக் கொண்டவுடன் அவர்களால்
உங்களை எங்கும் எப்படியும் நகர்த்த முடியும் உங்களின் உணர்ச்சிகள் மற்றவர்களின் தேவைகளுக்கான நோக்கங்களுக்கான ரிமோட் கண்ட்ரோலாக மாறும் இதனால் தான் உணர்ச்சி ரீதியான தேர்ச்சி ஆண்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று
சுய அதிகாரம் அவமதியாதையை சத்தியற்றதாக்குகிறது நீங்கள் பாதுகாப்பின்மை மனநிலையில் இருக்கும் போது அவமானம் அதன் பிடிமானத்தை இழக்கிறது உங்கள் தூண்டுதல்களை நீங்கள் புரிந்து கொள்ளும் போது எதிரி தனது செல்வாக்கை இழக்கிறார்
நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் போது அது உங்கள் பலவீனத்துக்கு பதிலாக ஒரு ஆயுதமாக மாறும் பிறரால் எளிதில் தூண்டப்பட முடியாத ஒரு மனிதன் தோற்கடிக்க முடியாத ஒரு மனிதன் அவனது மௌனம் புத்தி ஆகிறது அவனது அமைதி பாதுகாப்பாகிறது அவனது கட்டுப்பாடு சக்தியாகிறது இறுதி வார்த்தை நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் அடுத்த தருணத்தில் நீங்க யாராக இருக்க தேர்வு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் உணர்ச்சிப் பொறிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
உங்களை உடைக்க விரும்பும் நபர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்காதீர்கள் ஒரு தற்காலிக தாக்குதல் நிரந்தர விளைவுகளை உங்கள் வாழ்க்கையில் உருவாக்க அனுமதிக்காதீர்கள் உங்கள் உணர்ச்சிகள் உங்களை தள்ளும் மனிதனாக இல்லாமல் தருணத்தை சரியாக கையாளும் திடமான மனிதனாக இருங்கள். தன் எதிர்வினையை கட்டுப்படுத்த முடியாத மனிதன் அனைத்தையும் இழப்பான் ஆனால் தன்னைத்தானே கட்டுபிடித்துக் கொள்ளும் மனிதன் அசைக்க முடியாதவனாக இருப்பான் காதல் வாழ்க்கை திருமணம் வேலை தொழில் பணம் அனைத்திலும் ஜெயிப்பான் புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது…











