இறையின் தன்மாற்றம்.
ஒரு சிறு துகள். அது ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து சேர்ந்து இவ்வளவு பெரிய பிரபஞ்சமாயிற்று என்று சொல்கிறார்கள். நம்புவதுதான் சிரமமாக இருக்கிறது.” என்றார் நண்பர்.
எப்படி புரிய வைப்பது?
இது பஞ்சபூதங்களின் கூட்டிணைப்பு என்று.
இறையின் தன்மாற்ற சரித்திரம் படித்தால் புரியலாம். ஆனால் இப்பொழுதுதான் மன்றத்திலே நுழைகிறார்.
ஒரு சிறு example கொடுக்கிறேன்.
புரிகிறதா என்று பாருங்கள்.
சரி… என்றார்.
ஆலமரத்து விதை எவ்வளவு பெரிசு? “
என்று கேட்டேன்.
மிக நுண்ணியது ” என்றார்.
அந்த ஆலம் விதைதான் இவ்வளவு பெரிய பிரமாண்டமான ஆலமரத்துக்கு வித்து. இந்த பிரமாண்டம் அந்த சிறு ஆலம் விதைக்குள் Blue print ஆக இருக்கிறது. அதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்றேன்.
உண்மைதான் ” என்றார்.
அந்த ஆலம் விதை தன்னுள்ளிருந்து தன்னை வெளிபடுத்த, மண், நீர், சூரிய ஒளி, காற்று போன்ற எல்லா பஞ்சபூதங்களின் துணையும் தேவையாக இருக்கிறது.
அனைத்து இயற்கை சக்திகளும் இணைந்ததால், காலத்தால், அதன் வெளிப்பாடே பிரமாண்டமரம்.
இதேபோலதான், நுண்ணிய விண்ணின் தன்மாற்றமே பிரபஞ்சமும் மற்ற நிகழ்வுகளும்.
நீங்கள் அகத்தாய்வுகள் நிறைவு செய்தால் உங்களுக்கே தெளிவாக விளங்கும்.” என்றேன். Example very nice” என்றார்.
இது அருட்தந்தையின் ஞான சிந்தனை. – இறையே குருவே சரணம் சரணம்.











