விறல்மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானிலிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல
வொன்ற வினைமாதர் தந்தம்
வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீர குளிர்மாலையின்
கணணி மாலை தந்து குறைதீர
வந்து குறுகாயோ மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச வடிவேலெறிந்த அதிதீரா
அறிவாலறிந்துனிரு தாளிறைஞ்சு மடியாரிடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்து
அலைவாயு கந்தபெருமாளே!
முருகா சரணம்











