அமிர்தகடேஸ்வரர் பெயர் வர காரணம்
மயிலாடுதுறையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில் 8-வது வீரத்தலமாக இந்த கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இந்த கோவிலுக்கு அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் வர ஒரு வரலாற்று சிறப்பு நிகழ்வு காரணமாக அமைந்துள்ளது.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயன்ற போது முழு முதற் கடவுளான விநாயகரை அவர்கள் வழிபடவில்லை. இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்து வைத்தார்.
இந்த அமிர்த குடமே பிற்காலத்தில் கோவிலில் சிவலிங்கமாக உருவானதால் இங்குள்ள சிவபெருமானுக்கு ‘அமிர்தகடேஸ்வரர்’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் இக்கோவிலில் ‘கள்ளவிநாயகர்’ என்று ஒரு தனி சன்னதி பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏🕉️🕉️🕉️











