• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பங்குனி மாத சிறப்புகள்

siddharbhoomi by siddharbhoomi
March 15, 2023
in ஆன்மிகம்
0
பங்குனி மாத சிறப்புகள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பங்குனி மாத சிறப்புகள்

நாளை 15.03.2023 பங்குனி மாதம் விடியற்காலையிலேயே பிறக்கிறது. வருடக் கடைசி மாதம் பங்குனி மாதம் ஆகும். பங்குனி பிறந்தவுடன் விசேஷங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கிவிடும். பங்குனி மாத சிறப்புகள் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

பங்குனி மாத சிறப்புகள் என்பது, விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

ஸ்ரீராம நவமி,பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, காமத ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.

இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது.

இனி பங்குனி மாத சிறப்புகள் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் வருவது
காரடையான் நோன்பு
🙏🙏🙏🙏🙏🙏🙏

காரடையான் நோன்பு

பங்குனி மாத தொடக்கத்திலேயே வரும் முதல் விரத வழிபாடு, முதல் பண்டிகை காரடையான் நோன்பு ஆகும். பங்குனி மாத முதல் நாளில், மாசி மாதம் கடைசியில் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. ( மாசியும், பங்குனியும் கூடும் வேளை என்று சொல்லுவார்கள்)

இந்த வருடம் 15.03.2023 புதன் கிழமை காலை 6.34 am அளவில் மீனராசியில் சூரிய பகவான் பெயர்கிறார், பங்குனி மாதம் பிறக்கிறது. அன்று அதிகாலை 5 to 6 மணியளவில் சுமங்கலிகள் மற்றும் கன்னி பெண்கள் நோன்பு சரடு கட்டிக் கொள்வது நலம்.

காரடையான் நோன்பு

கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

சாவித்திரி என்ற‌ பெண் இவ்வழிபாட்டினை மேற்கொண்டு யமனிடமிருந்து தன்னுடைய கணவனின் உயிரினை மீட்டதால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது.

இவ்வழிபாட்டில் இடம் பெறும் நோன்புக் கயிறானது வழிபாடு முடிந்ததும் பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது.
இவ்விரத முறையினை திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் வழங்குவதாகவும் கருதுகின்றனர்.

பங்குனி உத்திரம்
🙏🙏🙏🙏🙏🙏🙏

05.04.2023, பங்குனி 22,

ஸ்ரீரங்கநாயகி தாயார் அவதரித்த சுபநாள், திருநாள், பங்குனி உத்திரம் ஆகும்.🙏🙏

பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளிலே சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ஸ்ரீராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும் சாஸ்தா, ஸ்ரீமகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது.
நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது.

ஸ்ரீராம நவமி
🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்துக்களின் முக்கியமான வழிபாடு ஸ்ரீராம நவமி ஆகும். கோவில்களில் மட்டுமல்ல, நம் அவரவர் வீடுகளிலும் ஸ்ரீராம நவமி முறையாக பூஜை செய்து கொண்டாடுவது வழக்கம்.

இந்த வருடம் 30.03.2023 வியாழக்கிழமை பங்குனி 16ம் தேதியன்று
ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமர் அவதரித்தது புனர்பூசம் நட்சத்திரத்தில்.
ஜெய் ஸ்ரீராம்🙏
ஜெய் ஸ்ரீ சீதாராம் 🙏
ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏

வசந்த நவராத்திரி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

22.03.2023 பங்குனி 8, ஆரம்பம்.

வசந்த நவராத்திரி
உலக அன்னையாம் பராசக்தியை விரதமுறைகளை மேற்கொண்டு வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சியமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என ஆண்டில் நான்கு நவராத்திரி விழாக்கள் அன்னையை வழிபட மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் முக்கியமானவை.

வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல் வளர்பிறை நவமி வரை ஒன்பது நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமி வரை பதினைந்து நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் சித்ரா பௌர்ணமி வரை நாற்பத்தைந்து நாட்களாவும் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

இவ்வழிபாட்டினை மேற்கொள்ள நல்ல யோகத்தினை அன்னை நமக்கு அருள்வாள்.

காமத ஏகாதசி
🙏🙏🙏🙏🙏🙏🙏

01.04.2023 – ஸ்மார்த்த ஏகாதசி
02.04.2023 ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி

பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு காமத ஏகாதசி என்று பெயர்.
ஏகாதசி தினத்தில்

இவ்விரதத்தை மேற்கொண்டால் பெருமாள் அருளால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

விஜயா ஏகாதசி
🙏🙏🙏🙏🙏🙏🙏

18.03.2023 , பங்குனி 4,

பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா என்றால் வெற்றி என்பது பொருளாகும்.

தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற விரும்புவோர் இவ்விரதமுறையை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இவ்விரத்தை மேற்கொண்டே இராவணனை வெற்றி கொண்டு, சீதா தேவியை மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

காரைக்கால் அம்மையார்

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி சுவாதியில் மேற்கொள்ளப்படுகிறது.

அர்ஜுனன்

பங்குனியில் அவதரித்ததால்தான் வில்வித்தை வீரனான அர்ஜூனன் பால்குணன் என்ற பெயரினைப் பெற்றான்.

தெலுங்கு வருடப்பிறப்பு/ யுகாதி பண்டிகை

22.03.2023, பங்குனி 8,

இவ்வாறு பங்குனி மாத சிறப்புகள் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டோமல்லவா?

வசந்த காலமான பங்குனி எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை அள்ளி வீசட்டும்.🙏

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏

Previous Post

காரடையான் நோன்பு

Next Post

தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்

Next Post
தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்

தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »