சூழ்நிலையை காரணம் காட்டி சோர்ந்து விடாதீர்கள்,
அனுபவம் தத்துவம்
வலி மனிதர்களை மாற்றுகிறது. சிலர் முரட்டுத்தனமாக மாறுகிறார்கள், சிலர் அமைதியாகி விடுகிறார்கள்.
நான் இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றுமேயில்லை என்று உணர்கிறேன்,ஆனாலும் என்னுடையது மட்டும்தான் உண்மையான இருப்பு என்று நம்புகிறேன்.
“அபத்தம்” சொன்னா புரிஞ்சுக்கோங்க
அடிச்சு அழுது சொல்ல வைக்காதிங்க 😌
உளி வீசி வலி தாங்கிய கல்லும் சிலை யாகிறது;
யாவும் யேதுமரியா
யென் னுள்ளம்தனில் பாவம்
யெதை கொண்டு வீசினாயோ தேவி;
பிரிவுண்டு கணம் தாங்கி
ரணம் பற்றி வலிகள் கசிந்து
மனம் பொசுங்கி புகையாய்
புகைந்து கொண்டிருக்கிறது;
இஃது
இன்றோடு மறந்திடாது
மரணம் அணைக்கும் வரை
தொடர்ந்திடும்
உளி வீசி வலி தாங்கிய கல்லும்
சிலை யாகிறது;
எழுதி
பேசுவதை
கைபேசியில்
பேசுவதை விடவும்
கண் பார்த்து நேரில்
பேசு அன்பு தொடரும் …
சூழ்நிலையை காரணம் காட்டி சோர்ந்து விடாதீர்கள்:
சூழ்நிலைகளுக்குள் கரைந்து போகிறவர்கள் சாதாரண மனிதர்கள்,
சூழ்நிலைகளை கடந்து போகிறவர்கள் சாதனை மனிதர்கள
நீ இழந்ததை நினைத்து
வருந்தினால்…..
இருப்பதை இழந்துவிடுவாய் ….
நீ இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் …..
இழந்ததை அடைந்து
விடுவாய் …..!!!
எல்லா வேலையையும் எளிதாக்க இயந்திரங்கள் பல
வந்த பிறகும்…………….
அன்பு காட்டும் வேலையை மட்டும் மனிதர்கள் பலரும் செய்வதில்லை…………!!
உலகம் சொன்ன
எல்லா
பொய்களையும் கேட்டும்
ஒருவன் உண்மையாக
வாழ்ந்தால்.
அந்த வாழ்க்கையே
பொய்யாகி விடுகிறது
யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்..
எந்த புற்றில் எந்த விஷ பாம்பு இருக்கும் என்று தெரியாது
அது நட்பாகவோ உறவாகவோ இருக்கலாம்….
#குறள்94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
##உரை94
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
நிலையில்லா இந்த
உலகில்
விலையில்லா உனது
நேசமொன்று
போதும்…
எல்லையில்லா அன்புடன் என்றென்றும் இம்மண்ணில் நான் ஜீவித்திடவே – சித்தர் பூமி











