🌺கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?
🌺முக்கனிகளில் முதல் கனியானது மா…இந்த மாங்கனி கிடைக்காத காரணத்தால் முருகன் பழனியில் ஆண்டி அவதாரம் பூண்டார் என்று புராணமும் கூறுகின்றது. உண்மையில் மாம்பழம் என்பது ஞானத்தை குறிப்பதாகும்…..
இந்த ஞானத்தின் ஒரு துளி நீர் பட்டால் கூட ஜென்ம ஜென்மாந்திரமான பாவங்கள் விலகி விடும். இதனால் தான் இந்த ஞானம் பெற்று சத்கதி அடைந்த 33 கோடி தேவர்களும் கங்கை நீருடன் இணைந்து கலசத்தில் உள்ளார்கள் என்ற ஐதீகமும் உண்டு.
அந்த புனித நீரை மாவிலையில் தெளிப்பதற்கு காரணம் கலியுக இறுதியில் தந்தை சிவபெருமானின் ஞானமானது “உன்னை ஆன்மாவாக புரிந்து உன் தந்தை பரமாத்மா சிவனாகிய என்னை நினைவு செய்”என்ற ஒரு துளி ஞானத்தின் மூலம் அனைத்து பாவங்களும் அழிந்துவிடுகின்றது என்பதே இதன் உண்மை பொருளாகும்….💐











