• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள்

siddharbhoomi by siddharbhoomi
May 13, 2026
in சித்தர்கள்
0
அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள்

அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள்

பஞ்சபூதத் தத்துவம் சித்தர்நூல் முறைப்படி உலகத்தில்

உலகத்தில் உள்ள சடப் பொருள்களுக்கு எல்லாம் பஞ்சபூதமே ஆதாரமாக உள்ளது . உடல் அழிந்தால் ஐம்பூதங்களும் வெவ்வேறாகப்

பிரிந்து போகும் . ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட மனித உடம்பும் அது இறந்தவுடன் அவனின்று பிரிந்துவிடும் . அம்மனித உடம்பு

பின்வருமாறு ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது .

1. மண், எலும்பு , சதை , நரம்பு , தோல் , மயிர்

2. தண்ணீர் பித்தம் , இரத்தம் , விந்து , கசிவு அல்லது கழிவு , வியர்வை

3. நெருப்பு பசி , தாகம் , தூக்கம் , அழகு , சோம்பல்

4. காற்று சுருக்கம் , விரிவு , அசைவு

5. ஆகாசம் இதயம் , கழுத்து ,

கழுத்து , தலை இவற்றில் உள்ள இடைவெளிகள் உயிர்கள் அனைத்தும் இறுதியில் பஞ்சபூதங்களாக மாறுகின்றன .

இப்பூதங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து சீவ அணுக்கள் ஆகின்றன . இவற்றில் இருந்து உடம்புக்குரிய பொருட்கள் அனைத்தும்

ஏற்படுகின்றது .

இரண்டாவது இச்சீவ அணுக்களே தங்களுக்கு உள்ள தொழில் இயற்றும் சக்தியால் உடம்பிற்கும் மனத்திற்கும் வேண்டிய

அம்சங்களைக் கொடுக்கின்றது . ஆகவே உடம்பின் படைப்புக்கு ஆதாரமான தொழில்களே வாதமாகும் ; பாதுகாப்புக்கு

வேண்டியதே பித்தமாகும் . அழிவுக்கு ஏதுவான தொழிலே கபமாகும் .

சீவ அணுக்களின் கலப்பினால் முக்குணம் என்ற சத்துவம் , இராஜசம் , தாமசம் ஆகியவற்றின் தொழில்கள் நடத்தப்படுகின்றது .

ஆத்மா , மனது , உடம்பு என்ற மூன்றும் சேர்ந்தது புருசம் எனப்படுகின்றது . இது மனத்தையும் உடம்பையும் தொழில் இயற்றவும்

பிரதிபலன் தூண்டவும் செய்யும் . உடம்பில் எழும் சக்திக்கு ஆன்மாவே காரணமாகும் . இருப்பினும் இது ஒரு பற்றுமின்றி ஒன்றுக்கும்

அசையாமல் தனித்து நிற்கும் .

சீவஅணுக்கள் நரம்பில் இருந்து எழும்பி , உடம்பைப் பூரணநிலைக்குக் கொண்டு வருகின்றது . உண்ணும் உணவு அன்னரசமாகி

இரத்தத்தைச் சேருகின்றது . அதன் பிறகு அதில் இருந்து உடம்பில் சதை , கொழுப்பு , எலும்பு , கடைசியாகப் பசையாக , விந்தாக

மாறும் .

இத்தொழில்கள் தொடர்ந்து நடைபெறும் போது வாதபித்தகபம் என்ற முப்பிணிகள் தோன்றுகின்றன . வாதபித்தகபம் ஆகியவை

உடம்பைக் காத்தலால் இவற்றை ஆதாரத் தாதுக்கள் என்பர் . இவை தன்நிலை மாறும்போது அதாவது கெடும்போது உடல்

சதைபாகங்கள் நல்ல நிலையில் இருக்காது .

மனிதனுக்குள் சூக்கும சக்திகள் மூளையிலும் , முதுகுத் தண்டின் கயிற்றுக்குள்ளும் இருக்கும் . இதுவே மனிதனுக்கு உள்ள

மூச்சு ( பிராண ) சக்தியாகும் . இம் மூச்சு சக்தியாகிய வாதத்தோடு பித்த கபம் கூடினால் முப்பிணி உண்டாகும் .

அதுபோது திரிதோசத்தின் காரணம் , குறிகள் , குணங்கள் ஆகியன அறிந்து இவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டுவருதல்

வேண்டும் . நோய்க்கான காரணம்

காலம் , அறிவு , புலன் இவற்றின் தொழில்கள் குறையின்றி இருந்தால் உடல் நலமாக இருக்கும் . எனவே நோய் என்பது உடல்நோய் ,

மனநோய் என இரண்டு வகைப்படுகின்றது . ஒன்றே மற்றொன்றுக்குக் காரணம் . அதாவது மனநோய் உடல் நோய்க்கு

இடங்கொடுக்கும் . இவ்விரண்டுக்கும் உடலின் கூறுபாடே ஆதாரமாக உள்ளது .

மேலும் பரம்பரை வழியாயும் நோய் ஏற்படும் . இது சித்த முறைப்படி முற்பிறவி அல்லது முன்னோர் செய்த வினைப்பயன்களால்

ஏற்படுவதாகும் . காலச்சக்கரத்தில் அறியக் கூடாத காரணங்களால் தாய் குழந்தைகளை இது பிற்காலத்தில் தாக்கும் . சித்தர்

நூல்களின் சிறப்பு

மனிதன் மனத்தினால் அதிகமாகத் தூண்டப்படுகின்றான் . ஆன்மா மனத்தின் மூலசக்தியின்வழி இயங்குவதால் அதிக வலிமை

அடைகின்றது . சித்தர் நூல்களில் உள்ள உண்மைகள் யாவும் அவர்கள் தியானத்தால் கண்டறிந்தவையாகும் .

அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போது என்று சட்டமுனி நிகண்டில் கூறியுள்ளபடி , மனிதனது இரத்தத்தாது

செவ்வாய்க்கோளை அனுசரித்ததாகும் . ஆத்மநிலைகள் சுக்கிரனுடைய ஆதரவை ஒட்டி நிற்கும் .

சித்தர் முறைப்படி , மனிதனானவன் ஐம்பூத அம்சம் ; கோள் அம்சம் ; பிரகிருதியின் மூலத்தில் உண்டாகி உடம்பில் உள்ள ஏழு

தத்துவங்களையும் கொண்ட ஆன்மாவைப் பொருந்தியவன் . இவன் கடவுளுக்கு மிக நெருங்கிய தொடர்புடையவன் . ஞானிகள்

உலகை ஆட்டுவிக்கும் சக்தி இன்னதென்று அறிந்தவர்கள் . உ

10 வெகுதூரத்து நிகழ்வுகளையும் தியான சிருஷ்டியால் கண்டறிபவர்கள் . இவர்களது நூல்கள் உலகத்தையே தன்வசமாக்கிக்

கொள்ளக்கூடிய சக்தியை மனிதனுக்கு அளிக்கின்றது . இது தெய்வத்தன்மை பொருந்திய உள்மனிதனை இனங்காட்டுகின்றது ;

மனிதன் நீண்ட காலம் வாழலாம் என்பதைக் கற்பிக்கின்றது .

எக்காலத்திலும் எவரும் ஏற்கும் அறிவுடைய தாகவும் , முக்காலத்திற்கும் பயனுடையதாயும் உள்ளவையே உண்மையான நூல் என்று

கருதப்படும் . சித்தர் நூல்கள்

உண்மையை ஆதாரமாகக் கொண்டவை . எனவேதான் அவை இன்றும் என்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தகுதியைப்

பெற்றுள்ளன . சித்தர்களின் யோகநெறி

யோகம் ஒன்றினால்தான் பிறப்பு இறப்பை வெகுவிரைவில் சுருக்கமாக முடித்துக் கொள்ள முடியும் . இவ்யோகம் குருவால் தொட்டுக்

காட்டப்பட வேண்டும் . அப்படியில்லாவிட்டால் உடம்பிற்குக் கெடுதி ஏற்படும் .ஆனால் – மாசற்ற தூய மனத்தினை உடையவருக்கு

அவரது மனமே ஒரு குருவாகத் தனக்குள் நின்று காட்டிக் கொடுக்கும் .

ஏனெனில் தெய்வ பக்தி மேலுக்கு ஓங்கத் தன்னைத் தானறிவதற்கு உண்டான அறிவு விளக்கமும் மேம்பட விருத்தியாகும் .

பஞ்சபூதங்களை யோகிதான் தன்ஆளுகைக்குட்படுத்த முடியும் . ஆகவே இயற்கையில் உண்டான பேதங்களையும் மாற்றலாம் .

சிருஷ்டி வகையில் எவ்விதமான வடிவமும் எடுக்கலாம் .தன்னுடைய உடம்பையே போக்கவும் செய்யலாம் .

குண்டலினிக்கு உள்ளே வலியும் , நரம்பு சக்தியும் தகுந்தபடி இல்லாவிடில் இதயம் துடிக்காது ; நுரையீரல் மூச்சுவிடாது ; உடம்பில்

இரத்த ஓட்டம் உண்டாகாது ; மற்ற உறுப்புகளும் தனக்குரிய தொழில்களைச் செய்யாது .

மனிதனுக்குள் உண்டான காந்த சக்தியால் உலகத்தாரைத் தன் வசமாக்கவும் , ஒரு நாட்டு வகுப்பினர்களைத் தன் ஆட்சிக்கு

உள்ளாக்கவும் செய்யலாம் .

இதற்குச்சாதாரணமான பிராணாயாமத்தால் உண்டான வலிவே காரணமாகும் . சித்தர்களின் தத்துவ ஞானம்

உலகப் படைப்பில் மனிதன் ஒருவனுக்கே அனைத்து விதச் சக்திகளும் உடம்பினுள் மறைந்துள்ளது . இச்சக்தியால் மனிதனைக்

கடவுளின் ஆற்றலுக்குச் சமமாகவே சொல்லலாம் . இச்சக்தி மாயையால் மறைக்கப்பட்டுச் சரியான பாதையில். செல்லவிடாமல்

தடுக்கும் . அப்படித் தடுக்காதபடி செய்துவிட்டால் இயற்கை சக்தியானது தனது முழுவலிமையைக் காட்டும் .

பஞ்சபூதங்கள் , ஆறாதார நிலைகள் , மூன்று நாடிகள் , முக்குணங்கள் இவை முதலான 96 தத்துவங்கள் ஆத்மாவிற்கு ஆதரவாய்

உள்ளன . சித்தர்களின் மனசிந்தனை

எண்ணம் , சொல் , செயல ஆகிய மூன்றும் நேர்கோடானால் மனம் நினைப்பது நடக்கும் ; கேட்பது கிடைக்கும் ; வலிமை பெறும் .

மனம் தெளிவானால் மனிதனின் வளர்ச்சிக்குத் தடையே இராது . மனத்தைக் கல்தூண்போல் உறுதியாக்க யோகம் தேவை

என்கின்றார் இடைக்காட்டுச் சித்தர் .

ஒரு குறிப்பிட்ட சாதனையை அடைவதற்காக உடம்புக்குப் பயிற்சி தருதல் போல மனத்திற்குப் பயிற்சி தருவது மனப்பயிற்சியாகும் .

ஒரு பொருளின் நுட்பம் அதிகமாக அதிகமாக அதன் சக்தி அதிகமாகும் என்பது அறிவியலாளர் கூற்று . மண்ணைவிட நீர் , நீரைவிட நெருப்பு , நெருப்பைவிடக் காற்று , காற்றைவிட வான் நுட்பமானவை ; சக்தி மிக்கவை .

அதுபோல் உடலைக் காட்டிலும் மனம் நுட்பமானது ; ஆற்றல்மிக்கது . உடற்பயிற்சியில் சாதிக்க முடியாதவற்றை மனப்பயிற்சியில் சாதிக்க முடியும் . சித்தர்கள் அட்டமாசித்திகளைச் செய்ய முடிந்ததற்குக் காரணம் மனப்பயிற்சியே ஆகும் .

சித்தர்கள் உடல் , மனம் , ஆன்மா ஆகிய மூன்றும் தூய்மை பெறுவதற்கான வழிமுறைகளைக் கூறி மனப்பயிற்சிக்கு வழிகாட்டி உள்ளனர் . மனிதனின் சிந்தனைகள் உயிரணுக்களின் மின் சாரதி தாக்குதலிகளாலும் , கவர்ச்சிகளாலும் பிறக்கின்றன

என்பது இன்றைய அறிவியலாளரின் கண்டுபிடிப்பாகும் . உள்ளத்து இயல்புகளில் காணும் வேறுபாடுகளுக்கு ஏற்பவே புறத்தோற்றத்தில் காணும் வேறுபாடுகள் அமையும் . சித்தர்களின் அறிவியல் பார்வை

வாதபித்த ஐய மருந்துகள் இன்றைய அறிவியலோடு ஒத்தவை . திருக்க நெறியில் அமைந்த அறிவியல் எனச் சித்தர்களின் உண்மைகளை இன்றைய அறிவியலாளரும் ஒப்புக் கொள்கின்றனர் .

நாபி எனும் நவபாடாணத்தைப் பசுவின் மூத்திரத்தில் போட்டு 24 மணிநேரம் ஊறியபின் பயன்படுத்தினால் அது இதயத்துடிப்பை ஊக்குவிக்கின்றது . ஆனால் ஊற வைக்காமல் அப்படியே பயன்படுத்தினால் அது இரத்த ஓட்டத்தைக் குறைத்து ஆளைக் கொன்றுவிடுகின்றது .

வேதியல் மாற்றம் பசுநீரால் மாறுவதை அறியும்போது சித்தர்களின் சித்து அறிவியல் முறையிலானது என அறிய முடிகின்றது .

அகத்தியர் நயனவிதி 500 என்ற நூல் 26 அறுவை மருந்துக் கருவிகளைப் பற்றிக் கூறுகின்றது . நாகமுனிவர் நயனவிதி என்ற நூல் கண் அறுவைசிகிச்சை பற்றிக் கூறுகின்றது . அறுவைக்கான கருவிகளைப் புளிய இலையைப் போட்டுக் கொதிக்க வைத்த நீரினால் சுத்தம் செய்து இருக்கின்றனர் .

பழனிமலை கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாடாண மூலிகையால் போகரால் உருவாக்கப்பட்டது . இது அவரின் இராசயன அறிவை எடுத்துக் காட்டுகின்றது .

இதனுடைய அபிடேகம் , தீர்த்தம் முதலியன கர்ப்ப நோயை விலக்குகின்றது ; குழந்தைச் செல்வம் கிடைக்கச் செய்கின்றது . இதுபோன்ற பல நடந்த உண்மைகளை அறியமுடிகின்றது .

சித்தர்களால் கூறப்பட்ட மூலிகை தாவர அறிவாலும் , மருத்துவச் சிந்தனைகளாலும் பல அரிய நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமெனப்

அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன .

உலோகம் , தாதுப்பொருள் , மூலிகை போன்றவற்றைத் தக்க சமயத்தில் பெற்று உரிய தட்பவெப்ப நிலைகளில் வைத்து உகந்த முறையில் பயன்படுத்தப் பருவங்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது . தாவரங்கள் வளரும் புவியைப் பற்றிய அறிவையும் பெற்று இருந்தனர் .

நித்திய கல்யாணி போன்ற இன்னும் பல மூலிகைகள் புற்றுநோயைத் தீர்க்கின்றன , ஆவாரை இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைக்

குறைக்கின்றது . இவைபோல் குப்பைவேளை , புதினா, கருநெல்லி , நிலவேம்பு , பொன்முசுட்டை , கீழாநெல்லி போன்ற பல தாவரங்களை ஆய்வு செய்து அதன் மருத்துவப் பண்புகளை வெளிப்படுத்தி உள்ளனர் . உடம்பில் உள்ள

உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றியும் , இயல்பு பற்றியும் , அமைப்பு பற்றியும் அகத்தியர் சமரச கலைஞானம் என்ற நூல் கூறுகின்றது .

ஒரே ஒரு நரம்பில் காணப்படும் மூவகைத் துடிப்புகளை உணர்ந்து அவற்றை விலங்கு , பறவை போன்றவற்றின் செயலுக்கு

இணையாக ஒப்புநோக்கிச் சித்தர்கள் குறித்துள்ளனர் . பல அறிவியல் விளக்கத்தை உள்ளடக்கியதாக நாடி பற்றிய செய்திகள் அமைகின்றன என்கின்றார் அறிஞர் ப.மு. வேணுகோபால் . சித்தர்களின் அணுச்செயல் மாற்றம் ( மரபணு மாற்றம் )

ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன் வாயிலாக அப்பொருளை வேறுபொருளாக மாற்ற முடியும் . நம் உடம்பு ஒளி புகாப்பொருள் ஆகும் . இதை யோகப் பயிற்சியால் ஒளிபுகும் பொருளாக மாற்றினால் கண்ணுக்குப் புலனாகா வடிவைப் பெற முடியும் .

வள்ளலார் ஒரு முறை நீதிமன்றம் வந்தபோது அவரைப் புகைப்படம் எடுத்தனர் . படச்சுருளை எடுத்துப் பார்த்தபோது அது வெள்ளையாக இருந்தது என்பர் .

எனவே கூடுவிட்டுக் கூடு பாய்தல் , சிறிய உருவத்தைப் பெரிய உருவமாக்குதல் , பெரிய உருவைச் சிறிய உரு ஆக்குதல் போன்ற அட்டமாசித்துகள் இன்றைய மரபணுமாற்றம் செய்யும் முயற்சிகளை ஒத்த கருத்துகளாக உள்ளன .

இன்று பரிசோதனைக் குழாயில் செயற்கை முறையில் குழந்தை உண்டாவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம் . இந்த அறிவியல் உண்மையைச் சித்தர்கள் முதலே கண்டு கூறியுள்ளனர் . கருப்பையில் இருந்து குழந்தை பிறப்பது யோனிமுறை .

அதுபோல் கும்பம் வழியாகக் குழந்தையை உருவாக்குவது கும்பமுறை ஆகும் . கும்பமுறை

நாதம் , விந்து , கந்தகம் , ஆண் , பெண் பாதரசங்கள் அடங்கிய கற்பத்துடன் மேற்சொன்ன பொருட்களில் ஒன்றாகிய செயநீரால் பாதரசம் , கந்தகம் , முப்பு ஆகிய மூன்றையும் வெண்ணையாக்கி , 1 கற்பம் உண்டாக்க வேண்டும் .

அதைக் கும்பம் போன்ற பாத்திரத்தில் வைத்து மூடவேண்டும் . கும்பத்தில் சீலைமண் செய்து கும்பத்தின் ” வாய்க்கு ஊசியால் இரண்டு மூன்று துளைகள் போட வேண்டும் . பின் இருட்டறையில் 300 நாள் வைக்க வேண்டும் . 300 நாள் ஆனதும் கும்பத்தில் குழந்தை உருவாகும் . கற்பு மருந்துகளில் நாதம் , விந்து ஆகியவை 4 : 3 எனும் விகிதத்தில் கலக்கப் பெற்றால் உருவாகும் குழந்தை ஆண் , பெண் என்றாகும் .

இம்முறையில் உருவாகும் குழந்தை மூன்றரையடி உயரம்தான் வளரும் . இம்முறையில் உருவான அகத்தியர் , குள்ளமானவர் என்பர் . அதனால்தான் அகத்தியரைக் கும்பமுனி , கலசமுனி , குள்ளமுனி என அழைக்கின்றனர் . கலசத்தில் வைக்கப்பட்ட பொருட்களில் ஒன்றான கந்தகத்தின் பெயரே கந்தன் என்று முருகனைக் குறிப்பதாகக் கூறப்படுகின்றது .

இதன்வழி இன்றைய Test Tube Baby முறை அன்றே இருந்தது தெரியவருகின்றது . எனவே இன்றைய அறிவியல் வெற்றியை அன்றே சித்தர்கள் அடைந்துள்ளனர் .

இப்படிச் சித்தர்கள் உயிரின் மூலங்களைக் கண்டறிந்து உள்ளனர் . அது எந்தப் பொருளின் சேர்க்கையால் உண்டானது எனத் தெரிந்து உள்ளனர் . அவற்றைக் கொண்டு கற்பங்களைத் தயாரித்து உள்ளனர் . கற்பத்தைக் கொண்டு கும்பமுறையில் குழந்தையை உருவாக்கியுள்ளனர் ( தமிழில் மருத்துவ இலக்கியங்கள் , ப .320 ) .

துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணுகும் ஆகச்

செய்குவோம் ஆராவாரித்து எதிராய் நின்று ஆடுபாம்பே ( பா .27 ) என்று பாம்பாட்டிச் சித்தர் பாடுகின்றார் . இப்பாடல் ஆணைப் பெண்ணாக , பெண்ணை ஆணாக மாற்ற முடியும் என்கின்றது . இது இன்று நவீன அறிவியலில் செயற்கை அறுவை மருத்துவம் வழி நடைமுறைப்படுத்தப்படுகின்றது .

சித்தர்கள் எட்டுவகைச் சித்துகளில் வல்லவர்கள் . தம் விருப்பப்படி அணுவின் செயல்களை மாற்றிக் காணும் ஆற்றல் பெற்றவர்கள் . அறிவியலில் அணுக்கரு சிதைவு Neuclear Fission ) எனும் முறையின்படி ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன்வழி அப்பொருளை வேறு பொருளாக மாற்ற முடியும் எனக் கண்டுள்ளனர் .

ஒரு பொருளைப் பற்றிய அறிவும் , அப்பொருளின் கருவைப் பற்றிய அறிவும் பெற்றவர்கள் எப்பொருளையும் மாற்றியமைக்கவும் உயிரற்ற பொருளுக்கு உயிரைத் தரவும் முடியும் .

மனிதர்களுக்கு D.N.A. என்ற உயிர்ப்பொருள் இன்றியமையாக் கருவாக உள்ளது . இதுவே இயல்புகளையும் குணங்களையும் நிர்ணயிப்பது என்பது அறிவியலார் கூற்று . எனவே ஒவ்வொரு உயிரின் D.N.A. வைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டால் D.N.A. கருவை மாற்ற முடியும் .

அப்படி மாற்றத் தெரிந்து கொண்டால் வேண்டிய வடிவங்களில் மாற்றிக் கொள்ள முடியும் . இதைத்தான் திருமூலர் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்கின்றார் . இறந்த பொருளுக்கு உயிருட்டித் தன்உயிரை அதில் புகுத்துவது .

மீண்டும் தன்னுடலில் உயிரைச் சேர்ப்பது ஆகிய அரியகலையில் வல்லவராகத் திருமூலர் விளங்கினார் என்பது திருமூலர் வரலாற்றில் நாம் அறிந்ததாகும் .

சித்தர்களின் உடற்கூறு , உடலியக்கம் , மருந்து வேதியியல் , நோய்நாடல் , நோய் முதல் நாடல் முறை , மருந்தியல் , அறுவை மருத்துவம் , மருந்து மூலிகையியல் , வேதகம் , காயகல்ப அறிவியல் , யோகமுறை , சாகாக்கலை போன்றன அறிவியல் ஆய்வுக்கு உரியன என்கின்றார் மூலிகைமணி க . வேங்கடேசன் ; இன்றைய மேனாட்டு மருத்துவ முறையில் காணப்படும் அறிவியல் நெறிக்கு ஏற்பவும் அமைந்துள்ளது என்கின்றார் ; இவற்றுக்கான சான்றுகளையும் தருகின்றார் . சித்தர்நெறி

அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள் . மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் நோயின்றி வாழ மருத்துவம் கூறியவர்கள் . மனித வாழ்க்கை முறைகளையும் , அதன் தத்துவங்களையும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறியவர்கள் .

இத்தகைய ஞானநிலையைக் கடுந்தவத்தின் மூலமாகத்தான் எய்தமுடியும் .

ஒழிந்தேன் பிறவி யுறவெனும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன் ( திரு .2958 )

இதுவே சித்தர் நெறியாகும் . ஆன்மவலிமையே மனத்திற்கு உறுதியான வலிமையைக் கொடுக்கும் . அதுதான் உடலுக்கு உறுதியையும் வலிமையையும் கொடுக்கும் . அதுதான் மனிதனின் உண்மையான வலிமை . மனிதன் வலிமை பெறுவதற்கும் , நேர்மையான வழியில் நடப்பதற்கும் பல நெறிமுறைகளைச் சித்தர்கள் சொல்லியுள்ளனர் .

வாழ்வில் துன்பத்தைத் தவிர்க்கச் சிலவற்றைச் செய்யக்கூடாது . உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்கக் கூடாது . நாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற தேவையற்ற கட்டுப்பாடுகளும் நமக்குத் தேவையில்லை .

திருமந்திரம் சித்தர் நெறியைப் பற்றிக் கூறும் சீரியநூல் , சித்தர்கள் கண்ட நெறி சிக்கல் பல மிகுந்தது . எனவே அது பற்றி அறிய வேண்டுவது இன்றியமையாததாகின்றது . சித்தர்கள் உண்மையில் வாழ்ந்தனர் ; வாழ்கின்றனர் .

இவர்கள் மனித மேம்பாட்டிற்கு வழிவகுத்தனர் .

மருத்துவம் , சோதிடம் , மாந்திரிகம் யோகமுறைகள் , ஞானம் , வாசியோகம் , சமயம் , தத்துவம் , இரசவாதம் போன்ற பல துறைகளைப் பற்றி இவர்கள் பேசியுள்ளனர் . இவர்கள் கூறியதைப் பின்பற்றினால் நோயில்லா உலகம் , மாசுபடாத வாழ்க்கை போன்ற நல்வழிகளை அடைய முடியும் . ஒவ்வொருவர் உள்ளும் சீவன் சிவலிங்கமாக உள்ளது .

எனவே மனிதன் தன்னை , தன் ஆற்றலை உணரும்போது அவனே இறைவன் ஆக முடியும் என்ற பேருண்மையை உணர்த்தியுள்ளனர் .

சித்தத்தைச் சிவன்பால் வைத்து , பரம்பொருளையே எப்பொழுதும் தியானித்து , தியானித்துச் சீவனே சிவமாக மாறியவர்கள் ; சீவாத் மாவே பரமாத்மா என்பதை உணர்த்தியவர்கள்;

உடலில் உயிர் சூட்சுமத்தை அறிந்து சக்தி நிலையைத் தெரிந்து , புரிந்து ஞானநிலையில் பூரணமான சக்தியைப் பெற்றுச் சுவாசத்தின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் ; திலர்த காலத்தில் உள்ளொளியைக் காணவேண்டும் என்று கண்டறிந்தவர்களாவர் .

தமிழ்நாட்டுச் சித்தர்கள் சாதி , மத , இன வேறுபாடுகளைக் கடந்தவர்கள் . கருவூரார் ஓர் அந்தணர் ; இராமதேவர் இசுலாமியர் . இவர்கள் மனித நலனில் அக்கறை கொண்டு மூடநம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் ; சிவவாக்கியர் சாதியாவதேதடா ? சலந்திரண்ட நீரெலாம் என்கின்றார் . இவர்கள் வெட்டவெளி

தன்னை மெய் யென்று உணர்ந்தவர்கள் . சித்தர் என்ற சொல் சித்தி பெற்ற அனைவரையும் குறிக்கின்ற சொல்லாக உள்ளது . உலகியலைத் துறந்தவர்கள் , உலகியல் நடப்புக்கு மாறானவர்கள் . சித்துக்கள் ஆடுவதில் வல்லவர்கள் . சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் . அலைபாயும் சித்தத்தை அடக்கியவர்கள் .

கூடுவிட்டுக்கூடு பாய்தல் என்ற கலையைக் கற்று அதனைச் செய்து காட்டியவர்கள் . உலகம் அனைத்தையும் சிவமயமாகக் கண்டவர்கள் . பிறப்பறுத்தவர்கள் , யான் , எனது என்னும் செருக்கை அறுத்தவர்கள் . 36 தத்துவப் படிகளையும் கடந்து உள்ளொளிப் புக்கு சிவம் கண்டு அனைத்தும் சிவமே என்று அறிந்தவர்கள் . சிவம் எங்கும் நிறைந் துள்ளது .

அது போல் இவர்களும் எங்கும் நிறைந்திருப்பவர்கள் . / அனைத்தையும் சிவன் செயலாகவே காண்பவர்கள் . இந்தச் சித்தர்கள் எப்பொழுதும் மூச்சை அடக்கித் தியானத்திலே இருப்பர் , அறிவுடைய சாத்திரங்களை உணர்ந்திருப்பர் .

எந்த நாட்டில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதனை அறியக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பர் . எண்வகைச் சித்துமூலம் கூடுவிட்டுக் கூடுபாயும் கலையை அறிந்தவர்கள்.

Previous Post

அமாவாசை காய்கறிகள் என்றால் என்ன தெரியுமா?

Next Post

சங்கம் மூலமே யாவும் ஏன்?

Next Post
சங்கம் மூலமே யாவும் ஏன்?

சங்கம் மூலமே யாவும் ஏன்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி

பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி

May 25, 2026
திருமலை குமாரசாமி திருக்கோவில்

திருமலை குமாரசாமி திருக்கோவில்

May 24, 2026
மரணம் ஒரு வரம்

மரணம் ஒரு வரம்

May 23, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »