ஏன் என்றால் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஏற்படுத்தியது நமக்காகவே என்று கூறினோம்.
அச்சங்கத்தில் இருந்தே எல்லாக் காரியங்களும் செய்திடவே –
“நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்” என்று வாய்ப்பறையார்க்கின்றார்.
அப்பாடல் இதோ:-
உலகெமெலாம் போற்ற
ஒளிவடிவ னாகி
இலகஅருள் செய்தான்
இசைந்தே – திலகன்
என நானே சன்மார்க்கம்
நடத்துகின்றேன்
நம்பெருமான் தானே
எனக்குத் தனித்து
-திருவருட்பா:5391
சங்கம் மூலமே யாவும் ஏன்?
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்றவர் எங்குள்ளார்?
நாம் அனைவரும் அவர் உண்டாக்கிய சன்மார்க்க சங்கத்தின் தொடர்ச்சி யாக உலகமெங்கும் எங்கெங்கெல் லாம் சங்கம் ஏற்படுத்துகின்றோமோ அச்சங்கத்தின் நடுவில் உள்ளார்.
ஆக குறைந்தபட்சம் நான்கு பேர் சேர்ந்து அசைவ உணவு விட்டு முழு சைவ உணவு உண்ணுபவர்களாகி பெருமானாரை நினைத்து ஒன்று கூடி ஒத்த தன்மையில் சன்மார்க்கம் பயில உணர அறிய ஓத ஆடிப் பாடி மகிழ்ந்து சத்சங்கம் செய்திட விரும்பினால் அக்கணமே வானம் பூமி சாட்சியாக உங்களிடையே பெருமானார் அருள் துலங்கும் இதனை அனைவரும் உணரலாம். இது சத்தியம். எளிமையாக சங்கம் உதயம்.
வீடோ தோட்டமோ அறையோ பெருமானாரை நினைத்து அவரவர் வீட்டு பெரியவர்கள் சகோதரிகள் அடியார்கள் சாதுவோ யார் முன்னி லையிலாவது ஒன்று கூடி தீபமேற் றினால் அக்கணமே பெருமானார் அருள் சங்கத்தில் பிரதட்சணம் மாக துலங்கும். அவ்வளவு தான் மிக எளிமையாக சங்கம் ஆரமபித்தா யிற்று. அவ்வளவே.
இப்பாடலை ஓதி உணர்வீர்:-
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை அன்பினோடும்
பாடிப்பாடி நீடுகின்றேன்
இன்பக் கூத்தாடுகின்றேன்
எண்ணமெல்லாம் நிரம்பினனே
-திருவருட்பா: 5445
பெருமானார் தாம் ஏற்படுத்தருளிய சங்கத்தில் தான் முழுமையாகக் காரியப்படுகின்றார் உணர்வீர்!
அப்படியாயின்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் யார்?
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் :-
திருவருட் பிரகாச வள்ளல்பெருமான் எனும் சிதம்பரம் இராமலிங்கம் சாமிகளே என்று உணர்வீர்!











