எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?”
பிரம்மம்.
மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?”
சத்தியத்தில்.
மனிதன் எதனால் சிறப்படைகிறான்?
மன உறுதியால்.
மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?”
தைரியமே மனிதனுக்குத் துணை.
எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?
இது சாஸ்திரத்தால் அல்ல; பெரியோர்களைப் பொறுத்தே.
பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?
தாய்.
ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?
தந்தை.
காற்றைவிட வேகமாகச் செல்வது எது?
மனம்.
புல்லைவிட அற்பமானது எது?
கவலை.
மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?
மனைவி.
தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?
வித்தை.
சாகப் போகிறவனுக்கு யார் துணை?
தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்.
பாத்திரங்களில் எது பெரிது?
அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் பூமி.
எது சுகம்?
சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.
மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?
கோபத்தை.
எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்?
ஆசையை
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?
கடன் வாங்காதவர்.
வேகம் மிக்கது எது?
நதி.
வெற்றிக்கு அடிப்படை எது?
விடாமுயற்சி.
உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?
கொல்லாமை.
உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?
அஞ்ஞானம்.
முக்திக்குரிய வழி எது?
பற்றினை முற்றும் விலக்குதல்.
முக்திக்குத் தடையாக இருப்பது எது?
நான்’ என்னும் ஆணவம்.
எது ஞானம்?
மெய்ப்பொருளை அறிதல்.
எப்போதும் நிறைவேறாதது எது?
பேராசை.
எது வியப்பானது?
நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.
உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?”
“”ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் இழிந்தவனே…”
பெற்ற தாய்- தந்தையை, பெரியோர்களை, மகிழ்விப்பவனே உலகில் தர்மனாகிறான்.அருமை. இது நதிகரையில் தண்ணீர் பிடிக்கச் சென்ற தம் சகோதர்கள் மயங்கிவிழுந்தநிலையில் தன் மைந்தனான தர்மரை, தர்மதேவதை கேட்க அதற்கு தர்மர் அளித்த பதில்களாகும். ராஜாஜியின் மகாபாரதத்தில் அருமையாக விளக்கப்பட்டிருக்கும்.











