உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?
ஓஷோ பதில்: எப்போதெல்லாம் நீங்கள் விரதத்திலிருக்கிறீர்களோ, உடலுக்கு ஜீரணிக்க வேண்டிய வேலை இல்லை. அந்தக் காலத்தில் உடல் இறந்த அணுக்களை வெளியேற்றக்கூடிய வேலையை செய்யலாம். கழிவுகள். ஒரு நாள், ஞாயிறோ, அல்லது சனியோ, நீங்கள் ஒய்வு நாளில் இருக்கிறீர்கள்.
நீங்கள் வீட்டுக்கு வருகிறீர்கள், உங்கள் முழு உடலையும் சுத்தப்படுத்துகிறீர்கள். முழு வாரமும் உங்கள் ஓய்ச்சல் இல்லாத வேலை. நீங்கள் மும்முரமாக இருந்தால் உங்களால் வீட்டைச் சுத்தப்படுத்த முடியவில்லையா? உடலுக்கு ஜீரணம் செய்ய எதுவும் இல்லாதபோது, நீங்கள் எதையும் சாப்பிட்டிருக்கவில்லை. உடல் தானே சுத்தம் செய்யத் துவங்குகிறது.
தன்னிச்சையாக தொடங்குகிறது, உடல் உடனே தேவையற்றதையெல்லாம் வெளியே தூக்கிப் போடுகிறது. அது ஒரு சுமையைப் போல, விரதம் என்பது ஒரு வகை தூய்மைப் படுத்துதல். எப்போதாவது ஒரு முறை விரதம் என்பது அழகானது. எதையும் செய்வதில்லை. சாப்பிடுவதில்லை. அப்படியே ஓய்வாக இருக்கிறீர்கள். எவ்வளவு திரவங்கள் எடுத்துக்கொள்ள முடியுமோ எடுத்துக்கொண்டு ஓய்வாக இருங்கள். உடல் சுத்தமாகி விடும்.
சில சமயங்கள் இன்னும் அதிக விரதம் தேவைப்பட்டால், நீங்கள் நீண்ட விரதம் இருக்கலாம். ஆனால் உடலின் மீது ஓர் ஆழ்ந்த காதலோடு. அந்த விரதம் உங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று எப்போதாவது தோன்றினால், உடனே அதை நிறுத்திவிடுங்கள். அந்த விரதம் உங்கள் உடலுக்கு உதவினால், நீங்கள் அதிக பலத்தோடு இருப்பதாக உணர்வீர்கள்.
உங்களுக்கு இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். உங்களுக்கு அதிக புத்துணர்ச்சி வரும். வீரியமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு நுண்ணிய அதிர்வு வருவதாக உணர்ந்தால், பிறகு எச்சரிக்கையாக இருங்கள். இப்போது அந்த விஷயம் இனியும் தூய்மைப்படுத்துதலில்லை. அது அழிவு. அதை நிறுத்துங்கள்.
ஆனால் ஒருவர் அதன் முழு விஞ்ஞானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் ஒருவர் விரதமிருக்கும் வெகு நாட்கள் விரதம் இருந்த யாரோ ஒருவரோடு விரதமிருக்க வேண்டும். அவருக்கு அந்த முழு பாதை நன்கு தெரியும், அதன் அறிகுறிகள் தெரியும்.
அது அழிவாக போனால் என்ன நடக்கும். அழிவில்லை என்றால் என்ன நடக்கும்; உண்மையான, தூய்மைப்படுத்தும் விரதத்திற்குப் பிறகு நீங்கள் புதிதாக, இளமையாக, சுத்தமாக, எடை குறைந்த, சந்தோசமாக இருப்பதாக உணர்வீர்கள்.
உடல் இப்போது நன்றாகவே செயல்படும். காரணம் இப்போது சுமை இறங்கிவிட்டது. ஆனால் விரதம் எப்போது வருமென்றால் நீங்கள் தவறாக சாப்பிட்டுக்கொண்டிருந்தால். நீங்கள் தவறாக சாப்பிடவில்லையென்றால், உங்களுக்கு விரதம் தேவையில்லை.
விரதம் எப்போது தேவைப்படுமென்றால் நீங்கள் உடலுக்குத் தவறு செய்திருக்கும்போதுதான். நாம் எல்லோருமே தவறாகவே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
–ஓஷோ











