ராகு காலம், எமகண்டம், குளிகை :
ராகு காலத்தில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாது. எமகண்டத்தில் கெட்டகாரியங்கள்
செய்யக்கூடாது. என்பது ஜோதிட சாஸ்திர விதி !
ராகு காலத்தில் இறை வழிபாடு, தங்க நகை வாங்குதல் ,பட்டு ஆடைகள் வாங்குதல், திருமணம் அல்லது வீடு வாங்கிட பேச்சை ஆரம்பித்தல், சொத்துக்கள் வாங்குதல், புதிய நிறுவனம் ஆரம்பித்தல் கூடாது.
இதை மீறிச்செய்தால் அந்த காரியங்கள் வெற்றி பெறாது. ஏனெனில்,ஜோதிடப்படி நவக்கிரகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. ஆனால் ராகு, கேதுக்களுக்கு என தனிக்கிழமைகள் ஒதுக்கப்படவில்லை. இவற்றில் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை ராகு பகவான் ஆளுகிறார்.
மேலே சொன்னவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வெனில், ராகு திசை நடக்கும் ஜாதகர்களுக்கும், திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மேலே சொன்ன விதிகள் பொருந்தாது. இவர்கள் ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்யலாம்.
எமகண்டத்தில் கெட்டது செய்யக்கூடாது.
குளிகை நேரத்தில் முதன் முதலாக ஒரு செயலை செய்தால் அதை மீண்டும் செய்ய நேரிடும். நம் வழ்க்கையில் எவை எல்லாம் மறுபடியும் நடந்தால் நல்லதோ அவற்றை மட்டும் குளிகையில் செய்ய வேண்டும்.
சொத்து வாங்குவது, கிரஹபிரவேசம் செய்வது,வெள்ளி, பொன் நகைகள் வாங்குவது, சேமிப்பு துவங்குவது, கடன் அடைப்பது, வெளி நாடு செல்வது போன்றவை செய்தால் அவை மீண்டும் மீண்டும் நடக்கும்.
குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம்.
தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டும் செய்யலாம்.











