அடக்க பிறவிக்கு அலங்காரம் எதற்கு?
நான் வெண்மை! உண்மையின் (சத்யம்) நிறம் வெண்மை!
ஆதி காலத்தில் ஞானிகள், மகான்கள், துறவு மேற்கொள்ள நினைத்தவர்கள், தான் நினைத்த இலக்கை அடைவதற்கு உடலை சீராக்க
மூச்சை ஆரோக்கியமாக வைக்க முயன்றார்கள். உடல், மூச்சு சுகப்படுதலில் தான் கற்கும் கலை முழு வடிவம் பெறும் என
நினைத்தார்கள். இதனை சித்தர்களின் துணையோடு ஆராய்ந்து பார்த்தார்கள்!
இதன் மகத்துவம் மஞ்சணத்தி மரத்தில் உயிர்த்துவம் இருப்பதை உணர்ந்தார்கள்! மஞ்சணத்தி மரத்தின் பட்டையை பக்குவப்படுத்தி
அதனோடு ஆல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில் போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலி பருத்தி இலையும்
சேர்த்து பின் வெண்மை நிற துணியை அந்த சுடு நீரில் மூழ்கி துவைத்து எடுத்தால் வெண் துணி காவி நிறத்தில் இருக்கும்.
முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகிவிடும்! இந்த ஆடையையே அணிந்தார்கள்! இந்த காவி நிற ஆடையை தழுவி
வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக்
கற்றார்கள்!
ஆனால் இது தெரியாமல் காவி என்றால் துறவு என்றாகிவிட்டது! காவி உடை எதற்கு, ஏன் என்று தெரியாமல் போனது!
பறவைக்கு தெரிந்த விஷயம் கூட படித்தவனுக்கு தெரியவில்லையே என வருந்துகின்றேன் நான்! ஆனால் இப்போது செயற்கை
சாயம் பூசி காவி உடை கட்டி அதில் மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன்!
காவி உடைக்கு அதுமட்டுமல்லாது இன்னொரு சூட்சுமமும் உண்டு. அது என்னவெனில் காவியை குளிரோ வெப்பமோ தாக்காது.
அதைப் போன்று ஒரு சாதகனுக்கு உடலானது எப்பொழுதும் சமச் சீரான வெப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த காவி
நிறத்தில் எப்பொழுதும் வெப்பம் இருந்து கொண்டே இருக்கும்.
கந்தல் துணி ஆனாலும் சரி புதுத்துணி ஆனாலும் சரி நன்றாக குளிரெடுக்கும் காலத்தில் சொட்ட சொட்ட நனைந்து தலையை துவட்டி விட்டு மேலே ஒரு ஈரமான காவித் துணியை போற்றினாலும் இரண்டு அல்லது ஐந்து வினாடிகளுக்குள் அது அதனுடைய வேலையை காட்டும் எவ்வாறு எனில், நமது உடல் சூடாக இருக்க வேண்டும் பட்சத்தில் உடலைச் சூடாகவும் குளிர்விக்க வேண்டும் என்ற பட்சத்தில் குளிர்விக்கும் அது உதவும் இது காவி நிறத்தில் சேர்க்கையோ அல்லது இயற்கையாகவோ உள்ள காலத்திற்கு மட்டும் உள்ள தொன்மையான விஷயம் ஆகவே சித்தர்களும் மகான்களும் காவியை உபயோகப் படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
இது மட்டுமல்லாது தாடியும் மீசையும் தலையில் குடுமியும் தேசத்திற்காக அல்ல. இது அனைத்தும் மனிதனுக்கு மனோபலமும் ஆன்ம பலமும் மற்றும் குறுஞ்செய்தி நெடுஞ் செய்தி ஆகியவற்றை இந்த பிரபஞ்சத்திலிருந்து கிரகிக்க உதவும் ஒரு மனிதன் அதிகமாக சவரம் செய்து முடியை வெட்டி அவன் தவத்தில் ஈடுபடும் பொழுது அவனுக்கு ஏற்ற விஷயங்கள் அவனைச்சுற்றி நடந்தாலும் அவனால் அதை புரிந்து கொள்ள இயலாது.
ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ தெரியாது ஆனால் அவனை சுற்றி இருக்கும் விஷயங்கள் அனைத்தும் பிளஸ் அல்லது மைனஸ் என்ற விகிதத்தில் இருக்கும் பொழுது அவன் எதை வேண்டுமோ அதை அவனால் கிரகிக்க முடியும் இதற்கு மயிர்கால்கள் மிகவும் முக்கியமாக அமைகின்றன.
அதேபோன்று எந்த ஊரு விஷயத்தையும் ஒரு ஆன்ம புரிதலையும் ஏற்படுத்துவது இந்த முடியின் முக்கியமான வேலையாக உள்ளது. ஆகவே தான் மகான்களும் ஞானியரும் இந்த விஷயத்தை கடைப்பிடித்தனர். உபகரணம் என்பது தேவையில்லை ஏனெனில் மூலிகையில் பல விஷயங்களை கண்ட மகான்களுக்கு ஒரு சொட்டு போதும் முடியை மீண்டும் மலர வண்ணம் செய்விக்க முடியும்.
சடை முடி யோகிகளும் ஞானிகளும் வளர்க்க காரணம், கூந்தலில் அண்டத்தின் சக்தியானது பாயும். அது உடலில் பரவி மனதை வலிமை படுத்தும். குழந்தை முதல் பெண்கள் கூந்தலை வளர்த்தே வருவதால் அவர்கள் மனம் ஆண்களை விட வலிமையானதாகும்.
இதே காரணத்திற்க்காகவே யோகிகளும் சடை முடியை வளர்த்து சடா முடி கட்டினார்கள். மனித உடலை அண்டத்தோடு கூடுதலாக இணைக்க வல்ல ஒரு ஈர்ப்பு கருவியே முடி.
அனைத்து பெரும் விஞ்ஞானிகளும் (முதல் ஆய்வு செய்தவர்கள்) சடை வளர்த்திருந்தனர். சிந்தனை ஓட்டத்ததை சிதைக்காமல் காக்கும் வல்லமை கூந்தலுக்குண்டு.
ஆதி காலத்தில் மகான், ஞானிகள், முனிவர்கள், சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி வாழ்ந்தார்கள். சாப்பிடாமல் இருந்ததால் கல்லீரல், மண்ணீரல் பாதிப்பு ஏற்படுவதால் அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள் சுரக்காயை பக்குவபடுத்தி அதன் குடுவையில் நீர் ஊற்றி அதனோடு நுணவு என்ற செடியின் பழத்தை பக்குவபடுத்தி
அதனோடு ஆல மரத்தில் கனி, கருந்துளசி, அருகம்புல், பிஞ்சிலம், உயிர்மொக்கு சேர்த்து குடித்து வந்தார்கள். தன்னை தேடி வந்தவர்க்கும் கொடுத்தார்கள். இந்த நீர் உறுப்புகளை சீராக்குவதுடன் வாயுத் தொல்லை தராது. அபான வாயுவையும் சீர்படுத்தும். அதை சீர்படுத்தினாலே ஞானநிலை அடைய முடியும்!
நுணவு காய்களை பக்குவபடுத்தி அதனோடு கல் உப்பு, மூங்கில் உப்பு, ஆலம் விழுது, வேலம் பிசின் சேர்த்து பல் தேய்த்தார்கள். பல நாட்கள் பல் துலக்காமல் இருந்தாலும் துர்நாற்றம் வராது. வாய் புண் வராது. அனைத்தையும் பக்குவம் அறிந்து உண்டார்கள். நோயில்லாமல் வாழ்ந்தார்கள்.
உன் உடல் நோய் தீர பாவம் செய்யாதே!
உன் மன நோய் தீர தர்மம் செய்!
காவி உடை எதற்கென்று உணர்!











