உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை.
உன் வாழ்க்கையில் ஏன் இத்தனை சீற்றம் வந்து உன்னை பந்தாடுகிறது என்று ஆதங்கப்படுகிறாயா. அதற்காக அந்த சீற்றமே தொடரும் என்று ஓரு போதும் இல்லை மறுபடியும் அது சகஜநிலைக்கு திரும்பி வர தான் வேண்டும்.
எப்படி மழை பெய்வதற்கு முன்னால் மேகம் கறுப்பாய் சூழ்கிறதோ அதே போல தான் இருள் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன வெளிச்சமும் இருக்கும். அது மெல்ல படர்ந்து பெரிய வெளிச்சமாய் மாறும் நேரம் தான் இது.
உன் வாழ்க்கையில் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் என ஒட்டு மொத்த வெளிச்சத்தையும் நான் உன் சாய்அப்பா தர போகிறேன. நிச்சயம் வாழ்வில் நீ உனக்கென ஓர் இடத்தில் இன்று நிலையூன்றி வேராய் விருட்சகமாய் உருவெடுக்கும் காலத்தை நீ நெருங்கிவிட்டாய்.
என்னை உன் சாய்தேவாவை நம்புகிறாய் அல்லவா. என் வார்த்தைகளை மரியாதையாய் வேதவாக்காய் நினைத்து செவிமடுத்து அது எடுக்கிறாய் அல்லவா. அப்படியென்றால் உன்னை நம்பு. உனக்குள் தான் என் ஓலி கேட்கிறது என்று உணர்ந்து அதை செயல் புரிய வைப்பேன் என்று நம்பு.
வெறுமையை உணர்ந்தால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாமல் இருக்கிறாய் என்று அர்த்தம். அதனுள் வலையில் மாட்டிய மீனை போல தத்தளிக்காமல் துள்ளி எழுந்து என் மடியில் உட்காரு. என் கருவறையில் வைத்து நான் வளர்ப்பேன்.
உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் என் அரவணைப்பில் நீ வாழ்வாய்….”











